பள்ளிகளில் பெண் குழந்தைகள் சேர்க்கை விகிதம் உயர்வு – மத்திய அமைச்சர் தகவல் !!
இந்தியாவில் பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கை விகிதம் 2019-2020ம் ஆண்டில் 77.8% ஆக உயர்ந்துள்ளது என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார்.
பெண் குழந்தைகள் சேர்க்கை விகிதம்:
இந்தியாவில் பெண் கல்விக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. முன் காலத்தில் சில மூடநம்பிக்கைகள், மக்களிடம் படிப்பறிவு இல்லாத காரணத்தாலும் பெண்கள் கல்வி கற்பதை பெரியோர்கள் தடுத்தனர். இளம் வயதிலேயே திருமணம் செய்து கொடுத்தனர் அதன் பின் அவர்களுக்கான கல்வி மறுக்கப்பட்டது. பிறகு பல்வேறு மாற்றத்தின் காரணமாக ஆண்களுக்கு நிகராக பெண்களும் கல்வி கற்றனர். அரசு பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியது. போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
தமிழக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கூடுதல் கடன் – அமைச்சர் அறிவிப்பு!
இதனால் சமூகத்தில் அனைத்து பெண்களும் பள்ளிக்கு சென்று கல்வி கற்கும் நிலை உருவாக்கியது. இன்றைய காலத்தில் பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. எனினும் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளதால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆரம்பித்துள்ளது. 2019-2020 ஆம் கல்வியாண்டில் மேல்நிலை வகுப்புகளில் 50.8% ஆக இருந்த பெண் குழந்தைகள் சேர்க்கை விகிதம் 52.4% ஆக அதிகரித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் பள்ளி கல்வியில் சேரும் விகிதம் 2019-2020ம் ஆண்டுகளில் அதிகரித்து உள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தொடக்க பள்ளி, நடுநிலை வகுப்பு, உயர்நிலை வகுப்பு, மேல்நிலை வகுப்புகளில் சேரும் மாணவிகளின் விகிதம் , 2018-2019 ம் ஆண்டில் உயர்நிலை வகுப்புகளில் 76.9% ஆக இருந்த பெண்களின் சேர்க்கை விகிதம் 2019-2020 ம் ஆண்டில் 77.8% ஆக உயர்ந்துள்ளது என மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.