மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே தவணையில் 18 மாத DA நிலுவைத்தொகை? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 18 மாதங்களாக நிலுவையில் உள்ள DA தொகையை அரசு ஒருமுறை செட்டில்மென்ட் செய்யும் என்று சில தகவல்கள் வெளி வந்தாலும், ஊழியர்களின் இந்த நம்பிக்கை பொய்த்துவிடும் என்று சில அதிர்ச்சி தகவல்கள் கூறுகின்றன.
DA நிலுவைத்தொகை
மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 18 மாத அகவிலைப்படி (DA) குறித்து பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. இப்போது கடந்த 18 மாதங்களாக நிலுவையில் உள்ள DA தொகையை அரசு ஒருமுறை செட்டில்மென்ட் செய்யும் என்று தகவல்கள் கூறினாலும், மத்திய அரசு ஊழியர்களின் நம்பிக்கை பொய்த்துவிடும் என்று சில தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. அதாவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத கால DA நிலுவைத் தொகையை வழங்குவதில் அரசு உறுதியாக இருப்பதாக தெரியவில்லை என்று சில நாட்களுக்கு முன்பு ஊடக செய்திகள் வெளியாகியுள்ளன.
விஜய் டிவி “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் மணிமேகலைக்கு நடந்த விபரீதம் – நடுவர் செய்த காரியம்!
இப்போது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி நிவாரணம் (DA & DR) அக்டோபர் 2021ல் 31% ஆக உயர்த்தப்பட்டது. இருப்பினும் DA நிலுவைத் தொகை இன்னும் அரசு ஊழியர்களின் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்படவில்லை. இதற்கிடையில், JCM தேசிய கவுன்சிலின் செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ராவை மேற்கோள் காட்டி சில ஊகங்கள், ஊடக அறிக்கைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது, கவுன்சில் தனது கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள போதிலும் இருதரப்பும் இதுவரை எந்த முடிவுக்கும் வரவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்ச் 7ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு – தேர்தல் எதிரொலி!
மேலும் அமைச்சரவை செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அது இன்னும் முடிவாகவில்லை என்றும் ஊடக செய்திகள் தெரிவித்துள்ளன. இதற்கிடையில் அகவிலைப்படி நிலுவைத் தொகையை ஒருமுறை கொடுத்து தீர்க்க வேண்டும் என தொழிலாளர் சங்கம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இதன் மூலம் லெவல்-1 ஊழியர்களின் DA நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை இருக்கும் என்றும் லெவல்-13 அல்லது நிலை-14 ஊழியருக்கு DA நிலுவைத் தொகை ரூ.1,44,200-2,18,200 ஆக இருக்கும் என்று அறிக்கைகள் மேற்கோள் காட்டுகின்றன.