LICயின் ஜீவன் சாந்தி திட்டம் குறித்த முழு விவரம் இதோ – பாலிசிதாரர்கள் கவனத்திற்கு!
அரசு ஊழியர்களை தவிர அனைத்து மக்களும் பென்சன் வாங்க எல்ஐசி பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் ‘ஜீவன் சாந்தி திட்டம்’ குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜீவன் சாந்தி திட்டம்:
இந்தியாவின் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி ஓய்வு காலத்தில் பல நன்மைகளை தரும் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த திட்டங்கள் மூலம் ஓய்வு காலத்தில் மாதம் அதிகமாக பென்சன் கிடைக்கும். குறிப்பாக ஜீவன் சாந்தி திட்டம் ஒரு பிரீமியம் திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் நீங்க சேர்ந்ததும் உங்களுடைய பென்சன் தொகை நிர்ணயம் செய்யப்படும். மேலும் இந்த திட்டத்தில் நீங்கள் சேர வேண்டும் என்றால் முதலில் ரூ. 1.5 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சமாக நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். மேலும் இந்த பாலிசியை 30 வயது முதல் 79 வயது வரை இருப்பவர்கள் எடுக்கலாம்.
அது மட்டுமில்லாமல் இந்த திட்டத்தில் சேர்ந்தால் பாலிசிதாரர்களுக்கு மாதம் ஓய்வூதியம் கட்டாயம் கிடைக்கும். மேலும் அந்த பாலிசிதாரர் இறந்தாலும் அவருடைய நாமினிக்கு வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தில் சேர முகவரி ஆதாரம் ( மின்சார கட்டண பில், ஆதார் அட்டை, பாஸ்போர்ட்), அடையாள சான்று (ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம்) ஆகியவை தேவை. மேலும் இந்த திட்டத்தில் பணம் செலுத்த நான்கு வகையான வசதிகள் இருக்கிறது. அதாவது ஆண்டு, அரையாண்டு, காலாண்டு மற்றும் மாதாந்திரம் முறையில் தொகையை செலுத்தலாம்.
Follow our Instagram for more Latest Updates
மேலும் தொகை வழங்கப்பட்ட நாளில் இருந்து ஒரு வருடம், ஆறு மாதங்கள், மூன்று மாதங்கள் அல்லது ஒரு மாதத்திற்கு பிறகு வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தில் சேர குறைந்தபட்ச வயது 30 ஆக இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் 37 வயது நிரம்பிய ஒரு நபர் இந்த பாலிசியை எடுத்தால் அவர் ஒரே பிரீமியம் தொகையாக ரூ. 20,36,000 செலுத்தினால் உடனடியாக அவர் பென்சன் வாங்க முடியும்.