தமிழகத்தில் திருமணத்துக்கு ரூ.50000 வரை நிதி உதவி – தாலிக்கு 8 கிராம் தங்கம்! முழு விபரங்கள் இதோ!
தமிழகத்தில் பொது மக்களுக்கு பல்வேறு நிதி உதவி சார்ந்த பல நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து மறுமணம் செய்யும் பெண்களுக்கு உதவி புரியும் வகையில் விதவை மறுமண நிதியுதவி திட்டம் ஒன்று உள்ளது. இது தொடர்பாக விரிவான தகவல்களை பார்க்கலாம்.
விதவை மறுமண நிதியுதவி திட்டம்
தமிழகத்தில் பொதுமக்களுக்கு தேவையான பல நல்ல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அத்துடன் பெண்களின் நலன் காக்க பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் குறிப்பாக ‘தர்மாம்பாள் அம்மையார்’ நினைவு படுத்தும் விதமாக விதவை மறுமண நிதியுதவி திட்டம் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. எனில் இந்த திட்டம் மூலமாக திருமணத்திற்கு தேவையான நிதி உதவி மற்றும் தாலிக்கு தேவையான தங்கத்தையும் பெற முடியும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TN Job “FB Group” Join Now
இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க 20 வயது முதல் 30 வயதுக்குள் நிரம்பியவராக இருக்க வேண்டும். அத்துடன் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க சில விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் விதவை பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கு முதல் திருமணமாக இருக்க வேண்டும். அத்துடன் இதில் ஆணின் வயதுக்கு உச்ச வரம்பு ஏதும் இல்லை. இதையடுத்து மறுமணம் முடித்த 6 மாத காலத்திற்குள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும். இதற்கு விண்ணப்பிக்க ஆண்டு வருமானத்திற்கும் உச்ச வரம்பு கிடையாது. விதவை மறுமண நிதியுதவி திட்டத்தில் மொத்தம் இரண்டு பிரிவுகள் உள்ளது.
கோபியை எச்சரிக்கும் ராமமூர்த்தி – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்டு! வைரலாகும் வீடியோ!
முதல் பிரிவில் கல்வித் தகுதி எதுவும் பெற்றிருக்க தேவையில்லை. இவர்களுக்கு 25,000 ரூபாய் நிதியுதவியுடன் மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கம் வரை வழங்கப்படுகிறது. அடுத்ததாக உள்ள பிரிவில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இந்த கல்வித்தகுதியை பெற்றவர்களுக்கு 50,000 ரூபாய் நிதி உதவியும் மற்றும் 8 கிராம் தங்கமும் வழங்கபடுகிறது. இதற்கு விண்ணப்பிக்க மாவட்ட சமூக நல அதிகாரி அலுவலகத்துக்குச் சென்று விண்ணப்பத்தை பெற்று கொள்ள வேண்டும். இந்த விண்ணப்ப படிவத்தை நிரப்பி அதனுடன் வயது சான்றிதழ், முதல் திருமணம் நடந்ததற்கான சான்றிதழ், முதல் கணவரின் இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழை இணைத்து வழங்க வேண்டும்.