ஆன்லைன் மூலம் ‘உழவர் அடையாள அட்டை’ பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
மத்திய அரசு சார்பில் ஆன்லைன் மூலம் உழவர் அடையாள அட்டை பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான எளிய வழிமுறைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
உழவர் அடையாள அட்டை:
தமிழகத்தில் உழவர் பாதுகாப்பு சட்டம் மூலம் உழவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த அட்டை மூலம் உழவர்களுக்கு அரசின் சலுகைகள் கிடைக்கிறது. விபத்து நிவாரண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் இறுதி சடங்கு உதவித்தொகை மற்றும் அவர்களின் உறுபினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை ஆகிய நல உதவிகள் வழங்கப்படுகிறது.
இந்திய நகரங்களில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் – தமிழ்நாடு முன்னிலை!
இந்த அடையாள அட்டையை பெற உழவர்கள் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும். மேலும் அங்கிருந்து விண்ணப்பம் பெற்று அதை முழுமையாக பூர்த்தி செய்து கிராம நிர்வாக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு உழவர் அடையாள அட்டை வழங்கப்படும். தற்போது ஆன்லைன் மூலம் உழவர் அடையாள அட்டை பெறும் நடைமுறை உள்ளது.
உழவர் அடையாள அட்டை பெறும் வழிமுறைகள்:
- முதலில் https://kisan.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் Farmer Registration என்ற Option-ஐ கிளிக் செய்து New User என்ற Option-ஐ தேர்தெடுக்கவும்.
- Application Enrolment Form என்பதை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும்.
- பிறகு உங்கள் முகவரி, வங்கி கணக்கு விவரம், அடையாள அட்டை விவரம் மற்றும் உழவர் விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
- அடுத்தபடியாக உழவரின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து Password ஐ உள்ளீடு செய்ய வேண்டும்.
- அனைத்து விவரங்களையும் சரிபார்த்த பின்பு Submit கொடுக்கவும்.