தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை – வானிலை மையம் அறிவிப்பு!

0

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை – வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கனமழை

தமிழகத்தில் மேல் மற்றும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் நிலவும் சுழற்சி காரணமாக ஒரு சில இடங்களில் மழைப்பொழிவு இருந்து வருகிறது. ஆனாலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் திருச்சியில் தான் அதிகளவிலான வெப்பம் பதிவாகி இருக்கிறது. அதாவது அதிகபட்ச வெப்பநிலையாக திருச்சியில் 39.9 டிகிரி செல்சியஸ் வரைக்கும் வெயில் பதிவாகி இருக்கிறது.

12 நேர வேலைநேரத்தை கண்டித்து மாபெரும் வேலைநிறுத்த போராட்டம் – தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

மேலும், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருவதால் கோயம்புத்தூர், சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பம் குறைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அடுத்ததாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான மழைப்பொழிவு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைப்பொழிவு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் மீனவர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லலாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!