வெள்ளத்தில் மிதக்கும் சென்னை – பேய்மழையால் பொதுமக்கள் தவிப்பு!!

0
வெள்ளத்தில் மிதக்கும் சென்னை - பேய்மழையால் பொதுமக்கள் தவிப்பு!!
வெள்ளத்தில் மிதக்கும் சென்னை - பேய்மழையால் பொதுமக்கள் தவிப்பு!!
வெள்ளத்தில் மிதக்கும் சென்னை – பேய்மழையால் பொதுமக்கள் தவிப்பு!!

தமிழகத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் மிக்ஜாம் புயலால் பொதுமக்களின் வாழ்வாதாரம் சேதமடைந்துள்ளது.

மிக்ஜாம் புயல்:

வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மிக அதிக கனமழை பெய்து வருகிறது. இந்த தீவிர புயல் வடதமிழகம், தெற்கு ஆந்திரத்துக்கு இணையே நகர்ந்து நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே நாளை கரையைக் கடக்கும் என்பதால் நாளை வரையிலும் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே, சென்னையில் உள்ள பல்வேறு அடுக்குமாடி குடியிருப்பிற்குள் வெள்ளநீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் நாளை (டிச.05) முக்கிய இடங்களில் மின்தடை – மின் வாரியம் அறிவிப்பு!

மேலும், குடியிருப்பிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் கார்களை கூட அடித்துச் சென்று கொண்டிருக்கிறது. இதனால், மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள தாம்பரம், வேளச்சேரி பகுதிகளில் உள்ள வாகனங்கள் அனைத்தும் அங்குள்ள மேம்பாலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய பேரிடர் மீட்புக் குழு மூலமாக பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது தான் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!