HDFC வங்கியில் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு – 2 லட்சம் கிராமங்களுக்கு இலக்கு!
HDFC வங்கி ஆனது தற்போது புதிய இலக்காக 2,500 பேருக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்த உள்ளது. அதனோடு சேர்ந்து 2 லட்சம் கிராமங்களுக்கு வங்கி சேவையை கொண்டு செலவும் திட்டமிட்டுள்ளது.
HDFC வங்கியில் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு:
தனியார் துறை வங்கியான HDFC வங்கி ஆனது தற்போது ஒரு புதிய இலக்கினை நிர்ணயித்துள்ளது. அத்திட்டத்தின் மூலம் அடுத்து வர இருக்கும் 18-24 மாதங்களில், 2 லட்சம் கிராமங்களுக்கு தனது கிளை நெட்வொர்க், வணிக நிருபர்கள், வணிக வசதி, டிஜிட்டல் அவுட்ரீச் பிளாட்பார்ம் போன்றவற்றை கொண்டு செல்ல தற்போது திட்டமிட்டுள்ளது. இவற்றின் மூலமாக தனது வருவாயை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – இணையவழி மோசடி ‘உஷார்’!
இந்த திடத்தினை செயல்படுத்திட புதிதாக 2500 நபர்களை வேலைக்கு அமர்த்திட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களை அடுத்த ஆறு மாதங்களில் செயல்படுத்திட இலக்கு நிர்ணயித்துள்ளது. HDFC வங்கி தனது கடன் வழங்கும் சேவைகளை தற்போது உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் செயல்படுத்தி வருவதை மேலும் விரிவுபடுத்திட முனைந்துள்ளதாக அதன் கிராமப்புற நிர்வாக குழு தலைவர் ராகுல் சுக்லா அறிவித்து உள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் கூடுதல் DA உயர்வு? சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?
மேலும் HDFC வங்கி அறுவடைக்கு முந்தைய மற்றும் பிந்தைய பயிர் கடன்கள், இரு சக்கர வாகனம் மற்றும் வாகனக் கடன்கள், தங்க நகைகளுக்கு எதிரான கடன்கள் மற்றும் பிற பராமரிக்கப்பட்ட கடன் தயாரிப்புகள் போன்ற தனிப்பயனாக்கப்பட்ட சலுகைகளை வழங்குவதாக முன்னதாக அறிவித்த நிலையில், அவற்றில் தற்போது புதிய சலுகைகளை வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வங்கி முன்னெடுத்து செயல்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
I need a job permanently…