HCL நிறுவனத்தில் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு – ஜூலை 1 முதல் சம்பள உயர்வு!
முன்னனி தகவல் தொடர்பு நிறுவனமான HCL டெக்னாலஜிஸ் தற்போதுள்ள நிதியாண்டில் சுமார் 20,000 முதல் 22,000 புதிய ஊழியர்களை பணியமர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளது. தவிர ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படும் சம்பள உயர்வுகளையும் வெளியிட உள்ளது.
ஐடி வேலைவாய்ப்பு:
தொழிநுட்ப சேவைகளில் முன்னணி இடத்தை வகிக்கும் இந்தியாவை சேர்ந்த சில IT நிறுவனங்கள் தனது சேவையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கத்தோடு பல புதிய ஊழியர்களை பணியமர்த்தி வருகிறது. அந்த வகையில் HCL தொழில்நுட்ப நிறுவனம் தற்பொழுது 20 ஆயிரம் முதல் 22 ஆயிரம் வரையிலான புதிய ஊழியர்களை பணியிலமர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது கடந்த நிதியாண்டில் பணியமர்த்திய ஊழியர்களின் எண்ணிக்கையை விட 50% சதவீதம் அதிகமாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 1 முதல் தனது ஊழியர்களுக்கான சம்பள உயர்வுகளையும் வெளியிட உள்ளது.
தமிழகத்தில் 83,482 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு – தொழில் திட்டங்களுக்கு முதல்வர் ஒப்பந்தம்!
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி வி.வி.அப்பராவ், கடந்த ஜூலை 19ம் தேதி அன்று, ‘கடந்த ஆண்டு உலகளவில் 14,600 புதிய ஊழியர்களை பணியமர்த்தினோம். இந்த ஆண்டு 20,000 முதல் 22,000 புதியவர்களை பணியில் அமர்த்துவதை இலக்காக கொண்டுள்ளோம். அதை விட தாண்டினாலும் ஆச்சரியமில்லை’ என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இந்நிறுவனம் கடந்த காலாண்டில் 7,500 பேரை வேலையில் அமர்த்தியது. இருப்பினும், ஜூன் 2021 இல் முடிவடைந்த முந்தைய காலாண்டில் இவை 11.8% மாக அதிகரித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அதே நேரத்தில் ஊழியர்களின் சம்பளத்தை ஜூலை 1 முதல் அதிகரிக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனிடையே நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக HCL நிறுவனத்தில் சுமார் 70% ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் இந்த காலாண்டின் இறுதிக்குள் முழு பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் அலுவலகங்களுக்கு வரும் மூன்று சதவீத ஊழியர்களை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. HCL கடந்த ஜூன் மாத காலாண்டில் 2.72 பில்லியன் டாலர்களை பதிவு செய்துள்ள நிலையில் இவை ஆண்டுக்கு 15.1% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.