தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – முதல்வர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரருக்கும் தரமான பொங்கல் பரிசு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொங்கல் பரிசு
ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரருக்கும் பொங்கல் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் வரவிருக்கும் ஜனவரி 14ம் தேதியான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுமார் ரூ.490 மதிப்பிலான 21 மளிகை பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு பரிசு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் இருக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து தாமரை வெளியேறியது ஏன்? ஷாக் ரிப்போர்ட்!
இம்முறை நிதி நெருக்கடி காரணமாக பொங்கல் பண்டிகைக்கு பணம் பரிசாக கொடுக்கப்படவில்லை. என்றாலும் பொங்கல் பரிசு தொகுப்பானது சுமார் 2.15 கோடி குடும்பங்களுக்கு ரூ.1,297 கோடி செலவில் வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அரசின் உத்தரவுபடி, கடந்த வாரத்தில் இருந்து விடுமுறை நாட்களில் கூட அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஜனவரி 10 முதல் ஊரடங்குடன் புதிய கட்டுப்பாடுகள் அமல் – மாநில அரசு அறிவிப்பு!
இந்நிலையில் அனைத்து ரேஷன் அட்டைதாரருக்கும் தரமான பொங்கல் பரிசு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதாவது, அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் என அனைவரும் ஒவ்வொரு பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் நடைபெறும் பொங்கல் தொகுப்பு விநியோகம் தொடர்பான பணிகளை பார்வையிட வேண்டும் என்றும் அனைத்து ரேஷன் அட்டைதாரருக்கும் தரமான பொங்கல் பரிசு கிடைப்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.