அரசு துறை ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 18 மாத நிலுவைத்தொகை வழங்குவது உறுதி!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத காலமாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி தொகை மொத்தமாக செலுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நிலுவைத் தொகை மட்டும் சுமார் 2 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
அகவிலைப்படி:
இந்தியாவில் கடந்த வருடம் முதல் கொரோனா பெருந்தொற்று பரவுவதால் மத்திய மாநில அரசுகள் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்கு அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தொகை பயன்படுத்தப்பட்டு வந்தது. அரசுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்த தளர்வுகளுக்கு பிறகு விலைவாசிகளும் தொடர்ந்து அதிகரித்தது.
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் எனக்கு பாவனியை பிடிக்காது – பகிரங்கமாக ஒப்புக்கொண்ட ராஜு! ரசிகர்கள் ஷாக்!
இந்த நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன அகவிலைப்படி தொகையை வழங்கவும், அகவிலைப்படியை உயர்த்தவும் கோரிக்கைகள் எழுந்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை மாதம் முதல் தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை. நிலுவை தொகையை வழங்க வேண்டும் என ஊழியர்கள் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். 2022ம் ஆண்டு தொடங்கியுள்ளதை அடுத்து 18 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை எப்போது கிடைக்கும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதையடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை தொகையை ஒரே தவணையில் வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை மட்டும் சுமார் 2 லட்சம் ரூபாய் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. அகவிலைப்படி நிலுவை தொகையை செலுத்துவது குறித்து கேபினட் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளனர். கேபினட் ஒப்புதல் கிடைத்த பின்னர் அகவிலைப்படி நிலுவைத் தொகை அரசு ஊழியர்களுக்கு மொத்தமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.