கேரளாவில் பள்ளி & கல்லூரிகளுக்கு செப்.2 முதல் 11ம் தேதி வரை விடுமுறை – மகிழ்ச்சியில் மாணவர்கள்!

0
கேரளாவில் பள்ளி & கல்லூரிகளுக்கு செப்.2 முதல் 11ம் தேதி வரை விடுமுறை - மகிழ்ச்சியில் மாணவர்கள்!
கேரளாவில் பள்ளி & கல்லூரிகளுக்கு செப்.2 முதல் 11ம் தேதி வரை விடுமுறை - மகிழ்ச்சியில் மாணவர்கள்!
கேரளாவில் பள்ளி & கல்லூரிகளுக்கு செப்.2 முதல் 11ம் தேதி வரை விடுமுறை – மகிழ்ச்சியில் மாணவர்கள்!

கேரளாவில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 30ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஓணம் பண்டிகை

கேரளாவில் ஓணம் பண்டிகை மிகப்பெரிய திருவிழாக்களில் ஒன்றாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் என தொடர்ச்சியாக வரும் 10 நட்சத்திர தினத்தன்று பிரமாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். இந்த ஓணம் பண்டிகை தினத்தில் மக்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து குளித்து, பெண்கள் கசவு எனும் வெள்ளை நிற புடவையை உடுத்துவார்கள். இந்த பண்டிகையின் 10வது நாளில் மக்கள் கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்வார்கள்.

TNUSRB PC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

ஓணம் பண்டிகை பொதுவாக அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கப்படும். இந்த 10 நாட்களில் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்பதற்காக மக்கள் அத்தப்பூ கோலமிடுவார்கள். இந்த பண்டிகையை மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாட ஏதுவாக அரசு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை கேரளா அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் 24ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாணவர்கள் அனைவரும் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வருகிற செப்டம்பர் மாதம் 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் விடுமுறைக்கு முன்பாக மாணவர்களுக்கு தேர்வுகள் முடிக்கப்பட வேண்டும் என்று 24ம் தேதி அன்று முதல் தேர்வுகள் தொடங்குகிறது. மேலும் முன்னதாக கேரளாவில் பெய்து வந்த கனமழை காரணமாக ஏராளமான நாட்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறை நாட்களை ஈடு செய்யும் விதமாக நேற்று பள்ளி மற்றும் கல்லூரிகள் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!