ஜூலை 26 முதல் 9, 10 & 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து கொண்டே வரும் நிலையில் குஜராத் மாநில அரசு பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி வருகிற ஜூலை 26ம் தேதி முதல் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை பாதிப்புகளை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் மற்றும் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள், கொரோனா தடுப்பூசிகளின் பயன்பாடு, அரசின் துரித நடவடிக்கைகள் காரணமாக தினசரி தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து பல்வேறு மாநில அரசுகள் மீண்டும் பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் குஜராத் மாநில அரசு தற்போது பள்ளிகள் திறப்பு குறித்து அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28% ஆக உயர்வு – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
அதன்படி குஜராத் அரசாங்கம் 9 முதல் 11ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூலை 26 முதல் 50% திறன் உடன் பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதித்துள்ளது. நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் பெற்றோரிடமிருந்து ஒப்புதல் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் வருகை கட்டாயமாக்கப்படவில்லை என்றாலும், அம்மாநிலத்தில் ஜூலை 15 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை – ஜூலை 28 கடைசி நாள்!
முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி, கிருமிநாசினி பயன்படுத்துதல் போன்ற தொற்றுநோய் தொடர்பான அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி வகுப்புகள் நடைபெற அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஜூலை 8ம் தேதி, குஜராத்தின் 18 நகர்ப்புறங்களில் 10 இடங்களில் இரவு ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் நீக்கியதுடன், 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை மீண்டும் தொடங்க அனுமதித்தது.