தமிழக பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் – வெளியீடு!
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள் :
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை குறைந்து வருவதை அடுத்து மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது. மேலும் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்ற வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை – வானிலை அறிக்கை!
அதன் படி மாணவர்கள் பள்ளிக்கு வரும் முன் பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்த வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் சரியான முறையில் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி நுழைவு வாயிலில் மாணவர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதிக்க வேண்டும். மாநில மற்றும் உள்ளூர் சுகாதார அமைப்பின் எண்களை பள்ளிகளில் காட்சிப்படுத்த வேண்டும். கழிப்பறை மற்றும் கை கழுவும் இடங்களில் சானிடைசர் வைக்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கழிவறைகளை சுத்தம் செய்தல் வேண்டும்.
TN Job “FB Group” Join Now
வகுப்பறைகளில் மாணவர்கள் 6 அடி தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் மட்டுமே பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்க வேண்டும். நோய் பரவல் அதிகம் உள்ள கட்டுப்பாட்டு பகுதிக்குள் உள்ள மாணவர்கள் தொலைபேசி மூலம் ஆசிரியர்களை தொடர்பு கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.