1 – 5ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு | மாநில அரசின் வழிகாட்டுதல்கள்!
கர்நாடகா மாநிலத்தில் இன்று 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் கல்வி நிறுவனங்கள் தீபாவளி பண்டிகைக்கு பிறகு பள்ளிகளை திறக்க திட்டமிட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,306 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக பாதித்துள்ளது என்று இன்று காலை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 443 இறப்புகளும் பதிவாகியுள்ளது. கோவிட்-19 வழக்குகள் குறைந்து வரும் நிலையில் கர்நாடக அரசு அக்டோபர் 18 ஆம் தேதி கோவிட் -19 தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுடன் ஆலோசித்து அக்டோபர் 25 முதல் 1 ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க அனுமதித்தது.
தமிழகத்தின் ‘இந்த’ 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!
அதன்படி கோவிட்-19 தொடர்பான முன்னெச்சரிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடித்து, கர்நாடகாவில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு பெற்றோரின் அனுமதி கடிதத்தை பெற்று வர வேண்டும். மேலும், பெங்களூரு மற்றும் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள பல தனியார் பள்ளிகள், தீபாவளிக்குப் பிறகு பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளது.
கர்நாடக அரசின் விதிமுறைகள்:
- பள்ளிக்கு நுழைவதற்கு முன்னதாக COVID-19 அறிகுறிகளுக்கான ஸ்கிரீனிங் பரிசோதனை செய்ய வேண்டும்.
- ஒரு வகுப்பறையில் 50 சதவீத திறன் மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
- குறிப்பாக பள்ளி நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் கூட்டமாக செல்வதை தவிர்க்க வேண்டும்.
- 1 சதவீதம் சோடியம் ஹைபோகுளோரைட் கரைசலைப் பயன்படுத்தி வகுப்பறைகள் மற்றும் கழிவறைகளை தினமும் கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
- இரண்டு டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே 1 முதல் 5 ஆம் வகுப்புகளில் அனுமதிக்கப்படுவார்கள்.
- 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் முகக் கவசங்களை பயன்படுத்த வேண்டும்.