கருப்பு பூஞ்சை மருந்துகளுக்கு GST வரிவிலக்கு – கொரோனா தடுப்பு உபகரணங்களுக்கு வரி குறைப்பு!
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு 5% சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளுக்கு வரி இல்லை என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
GST கவுன்சில்:
நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சில மருந்துகளும், தடுப்பூசிகளும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு GST வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு மருந்துகள், சில மருத்துவமனை உபகரணங்கள் மற்றும் பிற மருத்துவ பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி (GST) அதன் கவுன்சிலால் குறைக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலைய நடைமேடை கட்டணம் ரூ.30 ஆக உயர்வு – வடக்கு ரயில்வே அறிவிப்பு!!
அதாவது நோய் தொற்றுக்கு மத்தியில் மருந்துகளின் விலையை குறைக்க கோரிய, மந்திரி குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் வரி குறைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பால் பொருளாதாரம் மோசமான விளைவுகளை சந்தித்துள்ளதாகவும், வீட்டு நிதிகளையும் பாதித்துள்ளதாகவும் ஜிஎஸ்டிக்கான விகிதங்களை தீர்மானிக்கும் அரசியலமைப்பு அமைப்பு கூறியுள்ளது.
இதே போல கொரோனா தொற்றுடன் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் டோசிலிசுமாப் மற்றும் ஆம்போடெரிசின் பி போன்ற மருந்துகளுக்கு வரி விதிக்கப்படாது என கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்த வரி குறைப்புகள் செப்டம்பர் 30 வரை செல்லுபடியாகும் எனவும் வரும் நாட்களில் அவற்றின் காலக்கெடு நீட்டிக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.