ரயில் நிலைய நடைமேடை கட்டணம் ரூ.30 ஆக உயர்வு – வடக்கு ரயில்வே அறிவிப்பு!!
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக டெல்லி ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க நடைமேடை டிக்கெட் விலையை ரூ.30 ஆக உயர்த்த உள்ளதாக வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நடைமேடை கட்டணம்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் அமல்படுத்தியுள்ளன. பல மாநிலங்களில் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரயில் சேவை நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மக்கள் ரயில் பயணம் மூலமாக மாவட்டம் விட்டு மாவட்டம் பயணம் செய்கின்றனர்.
மதுபானங்கள் டோர் டெலிவரி செய்ய அனுமதி – முழு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்!
இதனால் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.கொரோனா பரவல் கட்டுப்பாடு நடவடிக்கையாக ரயிலில் பயணம் செய்பவர் தவிர உடன் வருபவர்கள் நடைமேடை கட்டணம் செலுத்தி இருந்தாலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள காரணத்தினால், நடைமேடை கட்டணம் வழங்கப்படாமல் இருந்தது.
TN Job “FB Group” Join Now
தற்போது தொற்று குறைந்த காரணத்தினால் மீண்டும் நடைமேடை கட்டணம் வழங்கப்பட்டு வருகிறது. டெல்லி மண்டலத்தில் உள்ள 8 ரயில் நிலையங்களில் மீண்டும் நடைமேடை கட்டணம் வழங்கப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க நடைமேடை கட்டணம் ரூ.30 ஆக உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.