அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை – மத்திய அரசின் முக்கிய எச்சரிக்கை!

0
அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - மத்திய அரசின் முக்கிய எச்சரிக்கை!
அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - மத்திய அரசின் முக்கிய எச்சரிக்கை!
அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை – மத்திய அரசின் முக்கிய எச்சரிக்கை!

நாட்டில் அரசு ஊழியர்கள் தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்தும், போராட்டம் நடத்தியும் வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம்

நாட்டில் கடந்த 2004ம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து நாடு முழுவதும் இருக்கும் அரசு ஊழியர்கள் இதற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று கொண்டு, சில மாநில அரசுகள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி கோவை, மதுரை மாநகரங்களில் மெட்ரோ திட்டம்!

இந்த நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி, மார்ச் 21ம் தேதி (இன்று) நாடு முழுவதும் மாவட்ட அளவில் அரசு ஊழியர்களை ஒன்றிணைத்து பழைய ஓய்வூதிய திட்ட சங்கத்தினர் தலைமையில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்றும் வேலை நிறுத்த செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

மேலும், பணியில் இல்லாத எந்தவொரு ஊழியருக்கும் ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள் கொடுக்கப்படக்கூடாது என எச்சரித்துள்ளது. அத்துடன், பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஊழியர்களை கால்நடை பராமரிப்பு மற்றும் பால்பண்ணைத் துறை எச்சரித்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!