தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் உறுதி – ஆளுநர் உரை!
தமிழகத்தில் இன்று கூடிய சட்டசபையின் கூட்டத்தொடரில் ஆளுநர் அவர்கள் தனது உரையை ஆற்றி வருகிறார். தனது உரையில் தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கட்டாயமாக நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்:
தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2020 ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக தமிழகத்தில் 2020 மார்ச் மாத இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
தமிழகம் முழுவதும் மீண்டும் உழவர் சந்தைகள் – ஆளுநர் உரை!
இதன் காரணமாக தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது. தற்போது வரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத காரணத்தால் இது குறித்து விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 16 வது சட்டசபையில் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் உரையுடன் தொடங்கியது.
TN Job “FB Group” Join Now
தனது உரையில் நீட் தேர்வு ரத்து சட்ட முன்வடிவு, 15 நாட்களில் புதிய ஸ்மார்ட் கார்டு உள்ளிட்ட பல்வேறு அறிக்கைகளை அறிவித்து வருகிறார். தற்போது இதனை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் குறைந்ததும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் உறுதியாக நடத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் 9 மாவட்டங்களில் நடத்தப்படாமல் இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் அவர்கள் தனது உரையில் தெரிவித்தார்.