தமிழக அரசின் சமூக சேவகர்களுக்கான விருது – ஜூலை 12 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினவிழாவின் போது அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கியவர்களுக்காக விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி இந்த ஆண்டு சிறந்த சமூக சேவகர் விருதுக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டுள்ளன.
விருதுக்கான விண்ணப்பங்கள்
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் சுதந்திர தினவிழாவின் போது, பல துறைகளிலும் சாதித்து, வெற்றியடைந்தவர்களுக்கு என தமிழக அரசு சிறப்பு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சுதந்திர தினவிழாவில் விருதுகளை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சமூக நல சேவைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான விருது வழங்க, ஜூலை 12 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் பட்டா வழங்க ஏற்பாடு – அமைச்சர் தகவல்!
இது குறித்து சமூக நல இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் உள்ள பெண்கள் குலத்திற்கே பெருமை சேர்க்கும் வகையில் மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் சிறப்பாக பணிபுரிந்து, மகளிர் நலனுக்காக தொண்டாற்றி வரும் சமூக சேவகர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து தமிழக அரசின் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் அரசு அங்கீகாரம் பெற்ற சமூக சேவை நிறுவனங்களில் இருந்து விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
தவிர விருது பெறுபவர் தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டவராக இருக்க வேண்டும். குறிப்பாக 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் இருக்க வேண்டும். இந்த தகுதியுடையவர்கள் அவர்களது விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவரின் பரிந்துரையை பெற்றிருப்பது கட்டாயம் ஆகும். மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பெண்களின் முன்னேற்றத்திற்காக சேவை புரிந்த சமூக சேவகர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், அதற்குரிய மாவட்ட சமூக நல அலுவலரை நேரில் அணுகி, வரும் ஜூலை 12ஆம் தேதிக்குள் கருத்துருக்களை சமர்ப்பிக்க வேண்டும்’ என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.