தமிழக அரசு சார்பில் பட்டா வழங்க ஏற்பாடு – அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பட்டா வழங்குவதில் காலதாமதம் ஏற்பட கூடாது என வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வருவாய்த்துறை அறிவிப்பு:
தமிழகத்தில் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர், துறை அதிகாரிகளுடன் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளுடன் பட்டா வழங்குதல், தொடர்பாக முதற்கட்ட ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் விநியோகம்!
அதன்பின்னர் அவர் கூறுகையில், தமிழகத்தில் அனைத்து நிலங்களுக்கும் விரைவாக பட்டா வழங்க வேண்டும் எனவும், காலதாமதம் ஏற்பட கூடாது என தெரிவித்தார். மேலும் போலி பட்டா வழங்கப்பட்டிருந்தால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசின் திட்டங்களை செயல்படுத்த அதிகப்படியான நிலங்கள் தேவைப்படுகின்றன.
மேலும் மற்ற துறைகளில் இருந்து நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் அதனை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டால் அதனை விரைந்து கையகப்படுத்த வேண்டும். மேலும் குத்தகைக்கு விடப்பட்ட நிலங்களுக்கு பலர் பணம் காட்டவில்லை அவர்களுக்கு 15 நாட்களுக்குள் நோட்டீஸ் அனுப்பி பணம் கட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
நீர் நிலை, புறம்போக்கு ஆக்கிரமிப்பை காலி செய்ய வேண்டும். பேப்பரில் உள்ள பழைய நடைமுறைகளை மாற்றி, பட்டா விரைவாக கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் கணினி மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.முதல்வர் திட்டத்தின் கீழ் பெரும்பாலான மனுக்கள் வருவாய் துறைக்கு தான் வந்துள்ளது. எனவே போலி பட்டா வழங்கியவர்களை கண்டறிந்து நோட்டீஸ் கொடுத்து முறையாக நடவடிக்கை எடுத்து நிலங்களை கையகப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளனர்.