கொரோனா நிதியாக தங்க சங்கிலி வழங்கிய பெண்ணிற்கு அரசு வேலை – நியமன ஆணை வழங்கல்!
தமிழக கொரோனா நிவாரண நிதிக்காக தனது தங்க செயினை வழங்கிய பெண்ணிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழக முதல்வர் அரசுப்பணி வழங்க உத்தரவிட்டுள்ளார். அதற்கான ஆணையை மின்சாரத்துறை அமைச்சர் இன்று வழங்கினார்.
கொரோனா நிதி:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அரசிற்கு இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக முதல்வர் கொரோனா இரண்டாவது அலையால் நமது மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று காணொளி மூலமாக கோரினார்.
தினசரி இரவு 9 மணிமுதல் இரவுநேர ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
இப்பேரிடர் காலத்தில் தாங்கள் ஒவ்வொருவரும் அளிக்கக்கூடிய நன்கொடைகள் அனைத்தும் கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு செலவழிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும், பொது மக்களும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற நன்கொடையை வழங்கி உள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் மேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைக்க முதல்வர் சென்ற போது சௌமியா என்ற பெண் கொரோனா நிவாரண நிதிக்காக தனது 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் தனக்கு வேலைவாய்ப்பு வழங்குமாறு உருக்கமான கடிதம் ஒன்றை வழங்கினார். இந்நிலையில் அந்த பெண்ணிற்கு நன்றி தெரிவிக்கும் நோக்கத்தில் அவரின் படிப்பிற்கு ஏற்றார் போல அரசு வேலை வழங்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார். இன்று அந்த பெண்ணிற்கு பணி நியமன ஆணையை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.