தினசரி இரவு 9 மணிமுதல் இரவுநேர ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
உத்திர பிரதேசத்தில் அமல்படுத்தப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகளில் இருந்து கூடுதல் தளர்வுகளாக இரவு ஊரடங்கு உத்தரவில் சில நேர மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 21 முதல் உணவகங்களை 50% வாடிக்கையாளர்களுடன் மீண்டும் திறப்பது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தாக்கமானது தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. முன்னதாக நோய் கட்டுப்பாட்டின் ஒரு பகுதியாக மாநிலங்கள் தோறும் விதிக்கப்பட்டு வந்த முழு ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உத்திரபிரதேசத்தில் முழு ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அளிப்பதற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி வரும் ஜூன் 21 முதல் இரவு 9 மணியிலிருந்து காலை 7 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
25 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் புக்கிங் – Paytm சலுகை!
அதுவரை இரவு நேர ஊரடங்கு உத்தரவானது இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்தியாளர்கள் சந்திப்பின் போது ல் கூறுகையில், ‘மாநிலம் முழுவதும் 50% இருக்கை வசதிகளுடன் உணவகங்கள் மீண்டுமாக துவங்க உள்ளது. மேலும் பூங்காக்கள் மற்றும் தெருவோர உணவகங்கள் போன்றவற்றை திறக்கவும் அனுமதி வழங்கப்படும். புதிய தளர்வுகள் குறித்து விரிவான வழிகாட்டுதல்கள் நெறிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும்.
TN Job “FB Group” Join Now
தவிர மாநிலம் முழுவதும் 19 மாவட்டங்களில் கொரோனா புதிய பாதிப்பு வழக்குகள் இல்லை என்றும், 45 மாவட்டங்களில் ஒற்றை இலக்க பாதிப்புகள் மட்டுமே பதிவாகி வருகிறது. ஆனாலும் கொரோனா வைரஸ் முற்றிலுமாக நீங்கவில்லை’ என தெரிவித்துள்ளார். முன்னதாக உத்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஜூன் 9 ஆம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.