தமிழக அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் தற்செயல் விடுமுறை – அரசாணை வெளியீடு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் தற்செயல் விடுமுறை - அரசாணை வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் தற்செயல் விடுமுறை - அரசாணை வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் தற்செயல் விடுமுறை – அரசாணை வெளியீடு!

தமிழக அரசு ஊழியர்களுக்கு கொரோனா காரணமாக சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசாணை மறுக்கப்பட்டு வந்த நிலையில் முதலமைச்சரின் தனிப்பிரிவு அது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.

சிறப்பு தற்செயல் விடுப்பு:

நாடு முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று பரவி வந்தது. அந்த நோய்த்தொற்றால் அதிக அளவிலான மக்கள் உயிழந்துள்ளனர். அதனால் பெரும்பாலான குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இந்த கொரோனா காலகட்டத்தில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் என அனைத்தும் இயக்கப்படவில்லை. ஆனால் ஒரு சில அதாவது ரேஷன் கடை, காவல் துறை, மருத்துவத்துறை போன்ற அரசு துறைகள் மட்டும் இயக்கத்தில் இருந்தன. ஏனெனில் மருத்துவர்கள் தொற்றால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். காவல் துறை மக்களை வெளியில் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதனை தொடர்ந்து ரேஷன் ஊழியர்கள் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்கு பணியில் தொடங்கும் நிலை இருந்தது.

தமிழகத்தில் தீபாவளி முடிந்த பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!

அப்போது இயக்கத்தில் இருந்த அனைத்து துறையைச் சேர்ந்த அரசுப் பணியாளர்களுக்கும், மக்களுக்கும் நேரடி தொடர்பு இருந்தது. அதனால் கடந்த 2020ம் ஆண்டு அரசு ஊழியர்கள் அல்லது அவர்கள் குடும்பத்தார்கள் யாரேனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த குறிப்பிட்ட அரசு ஊழியருக்கு 14 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அளிக்க அரசாணை வெளியிடப்பட்டது. ஏனெனில் அரசு ஊழியருக்கோ அல்லது அவர்கள் குடும்பத்தில் யாருக்கேனும் கொரோனா தொற்று பாதித்திருந்தால் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். அதற்காகவே இந்த அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் இந்த சிறப்பு தற்செயல் விடுப்பு அரசாணையின் படி விடுப்புகள் கேட்பவர்களுக்கு இதுவரை மறுக்கப்பட்டு வந்துள்ளது.

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு ரத்து – காரணமும், விளக்கமும்!

இது குறித்து செங்கல்பட்டு முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவு வாயிலாக கடந்த 2020ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணைக்கு விளக்கம் கேட்டு மனு அனுப்பியுள்ளார். அதற்கு அரசு ஊழியர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டால் அந்த அரசு ஊழியருக்கு 14 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் தனிப்பிரிவு விளக்கம் அளித்துள்ளது. மேலும் இந்த அரசாணை முழுக்க முழுக்க மக்களின் நலன் கருதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசின் இந்த சிறப்பு தற்செயல் விடுப்பு அரசாணை அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!