ஆண்டின் தொடக்கத்திலேயே அதிரடியாக 3,200 பேர் நீக்கம் – கோல்டுமேன் சாச்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு!
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்களும் பொருளாதார மந்த நிலை காரணமாக பணி நீக்கம் செய்து வரும் வேளையில், கோல்டுமேன் சாச்ஸ் நிறுவனமும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.
பணி நீக்கம்:
2022 – 2023ம் நிதியாண்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் அனைத்தும் செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. அதன் முதல்படியாக, சம்பள உயர்வு நிறுத்தி வைப்பு, புதியவர்கள் நியமனம் நிறுத்தம், ஊழியர்கள் பணி நிறுத்தம் போன்றவைகளை அதிரடியாக செய்து வருகிறது.
New Year ஸ்பெஷல்: ரூ.749 க்கு 2 ஜிபி வழங்கும் ஜியோ – பயனர்களுக்கு குஷி!
Follow our Instagram for more Latest Updates
உலகின் முன்னணி நிறுவனங்கள் முதல் சிறு, குறு தொழில்கள் வரை அனைத்துமே இந்த பொருளாதார சரிவு நிலையால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனமும், கடந்த ஆண்டே இந்த பணிகளை தொடங்கியுள்ள போதிலும், தற்போது ஜனவரி மாத தொடக்கத்தில் மேலும், 3,200 பேரை அதிரடியாக வங்கி துறைகளில் இருந்து நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
மேலும், நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், இதற்கான ஆய்வுகள் நடந்து வருவதாகவும், ஆலோசனைக்கு பின்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். நிறுவனத்தின் இந்த அறிவிப்பினால் ஊழியர்கள் பலர் பதற்றமடைந்துள்ளனர்.