தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி – இன்றைய நிலவரம் உள்ளே!
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 அதிகரித்து ரூ.42,992-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,374-க்கு விற்பனை ஆகிறது.
தங்கம் விலை:
மக்களுக்கு தற்போது பெரிய கலக்கத்தை உண்டு செய்வது தங்கம் விலை தான். நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கம் விலையால் நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். குறிப்பாக பிப். 1 அன்று நடந்து முடிந்த பட்ஜெட், நகை விலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். தங்கம் ஒரு பவுன் மீண்டும் ரூ.43 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நேற்றைய (07.02.2023) நிலவரப்படி காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.64 அதிகரித்து ரூ.42 ஆயிரத்து 984-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,373 ஆக விற்பனை செய்யப்பட்டது.
விவசாயிகளுக்கான மத்திய அரசின் உதவித்தொகை அதிகரிப்பு? வெளியான முக்கிய தகவல்!
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் இன்றைய (08-02-2023) காலை நேர நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 அதிகரித்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.42,992-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்துள்ளது. எனவே ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,374-க்கு விற்பனை ஆகிறது. அதை தொடர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.74-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.74,000க்கு விற்கப்படுகிறது.