அடுத்த கல்வியாண்டு முதல் புதிய கல்விக் கொள்கை அமல் – கோவா முதல்வர்!
கோவா முதல்வர் பிரமோந்த் சாவந்த் அங்கு அடுத்த கல்வி ஆண்டு முதல் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கை:
இந்திய மத்திய அமைச்சரவையால் 2020 ஜூலை மாதம் இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய கல்விக் கொள்கை இந்திய நாட்டின் கல்வி அமைப்பை எதிர்காலத்தை நோக்கி கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் பழைய கல்விக் கொள்கைக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டது. புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தியதில் இருந்து அதற்கு ஆதரவுகள் ஒரு பக்கம் வந்தாலும், எதிர்ப்புகளும் ஒரு பக்கம் வந்து கொண்டு தான் இருக்கின்றது.
2021 நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு – தேசிய தேர்வு முகமை!
புதிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கமாக தாய்மொழி வழி கற்றல் திட்டம் இருக்கிறது. அதன்படி, மாணவர்கள் 5ம் வகுப்பு வரையிலும் அல்லது அதற்கு பின்னரும் கூட தங்கள் தாய்மொழியிலேயே பாடங்களை கற்க வேண்டும். இந்நிலையில், கோவா முதல்வர் பிரமோந்த் சாவந்த் செப்டம்பர் 6ம் தேதி அன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதில், அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்ட பிறகு அடுத்தாண்டு முதல் தொடக்க நிலைக் கல்வி வகுப்பு மாணவர்களுக்கு புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும். புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய இரண்டு உயர்நிலைக் குழுக்களை கோவா அரசு கடந்தாண்டு நியமித்தது. அந்தக் குழுவின் பரிந்துரை தற்போது அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.