மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட் கட்டணத்தில் மீண்டும் சலுகை அமல்? ரயில்வே அமைச்சகம் கூறியது என்ன?
மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணத்திற்கான டிக்கெட் கட்டணத்தில் 50% வரை சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா கால கட்டத்தில் இந்த சலுகை நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது இந்த சலுகை மீண்டும் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ரயில்வே அமைச்சகம் கூறியது தொடர்பாக விரிவாக பார்ப்போம்.
மூத்த குடிமக்கள்
இந்திய நாட்டில் பொது போக்குவரத்தில் ஒன்றான ரயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரயில்வே நிர்வாகம் கடந்த 2016ம் ஆண்டு மூத்த குடிமக்களுக்கான பயண டிக்கெட் கட்டணத்தில் சலுகைகளை அறிமுகப்படுத்தியது. அதன்படி 60 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு 40% வரை கட்டணத்தில் தள்ளுபடியும், இதே போல் 58 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு 50% வரை கட்டணத்தில் தள்ளுபடியும் வழங்கப்பட்டது.
ஆனால் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா கால கட்டத்தில் இந்த சலுகை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தற்போது மீண்டும் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் குறிப்பாக ஸ்லீப்பர் கோச் மற்றும் 3ம் ஏசி வகைகளிலாவது மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் மீண்டும் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நகைப்பிரியர்களுக்கு சர்பிரைஸ் – சற்று குறைந்த ஆபரணத்தங்கத்தின் விலை.. இந்த சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க!
இந்த நிலையில், ரயில்வே அமைச்சகம் இது தொடர்பாக கூறியதாவது, மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் வழங்குவது தொடர்பாக எந்த எண்ணமும் இல்லை என தெரிவித்துள்ளது. ஏனெனில் மூத்த குடிமக்களுக்கான சலுகையில் 40% முதல் 50% வரை கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்படுவதால் ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.2000 கோடி வரை பெரும் நிதிச் சுமை ஏற்படுகிறது. அதன் காரணமாக இந்த சலுகையை ரயில்வே நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.