TNUSRB PC Exam: Test Yourself | பொதுத்தமிழ் வினா – விடை!! Day 12!!!
Q.1)ஓதல் வேண்டும் என்பது எவ்வகை எந்த சொல்லிசை அளபெடைக்கான எடுத்துக்காட்டாகும்?
a)மொழி முதல்
b)மொழியிடை
c)மொழியிறுதி
d)மேற்கண்ட எதுவுமில்லை
Q.2)சைவத் திருமுறைகளில் எத்தனையாவது திருமுறையாக திருவாசகமும் திருக்கோவை யும் உள்ளன?
a)ஏழாம்
b)மூன்றாம்
c)ஐந்தாம்
d)எட்டாம்
Q.3)வருந்தாமலே எல்லா நலன்களையும் தரக்கூடியது என வள்ளுவர் குறிப்பிடுவது எது?
a)பிறருக்கு உதவி செய்தல்
b)பிறரிடம் அன்பு செலுத்துதல்
c)பொய் பேசாமை
d)நல்லொழுக்கம்
Q.4)சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கும் அமையப் பாடும் பருவம் எது?
a)வருகை பருவம்
b)அம்புலிப் பருவம்
c)சப்பாணி பருவம்
d)தால் பருவம்
Q.5)செலவிடா தீதொரீஇ இதில் இடம்பெறும் அளபெடை?
a)இன்னிசை
b)சொல்லிசை
c)மெல்லிசை
d)குரலிசை
Q.6)எந்தமிழ்நாடு என்ற சொல்லை பிரித்தெழுதுக:
a)எந் + தமிழ்நாடு
b)எம் + தமிழ் +நாடு
c)எ + தமிழ் + நாடு
d)எம்+ தமிழ்நாடு
Q.7)பாண்டியர்களைப் பற்றி குறிப்புகள் மிகுந்து காணப்படும் நூல் எது?
a)புறநானூறு
b)அகநானூறு
c)பரிபாடல்
d)கலித்தொகை
Q.8)திருத்தொண்டத் தொகையை பாடியவர் யார் ?
a)சுந்தரர்
b)அப்பர்
c)பெரியாழ்வார்
d)சேக்கிழார்
Q.9)சந்திப்பிழை இல்லாத தொடரைக் கண்டறிக?
a)தாயைப் போற்று
b)செலவுச் செய்து
c)காய்க்கறி
d)வாங்க சென்றான்
Q.10)இருபாலருக்கும் பொதுவான பருவங்களாக பிள்ளைத்தமிழ் கூறுவன யாவை?
a)காப்பு
b)செங்கீரை
c)சப்பாணி
d)மேற்கண்ட அனைத்தும்
Q.11)“ இமையும் கண்ணும் போல”–என்பது எதை குறிக்கிறது?
a)சேர்ந்தே இருத்தல்
b)முரண்
c)ஏக்கம்
d)அன்பு
Q.12)” உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளத் தேனே”- என்று கூறியவர் யார்?
a)சேக்கிழார்
b)திருமூலர்
c)கவிமணி
d)திருநாவுக்கரசர்
Q.13)பொருந்தாத ஒன்றைத்தேர்வு செய்க?
a)தென்னவன்
b)பாண்டியன்
c)கிள்ளி
d)மாறன்
Q.14)சிறுபஞ்சமூலம் என்பதன் பொருள் என்ன?
a)பஞ்சபூதம்
b)பாண்டவர்கள்
c)ஐந்து சிறிய வேர்கள்
d)நவதானியம்
Q.15)கைப்பொருள் என்ற சொல்லை பிரித்தெழுதுக :
a)கை+ப்+பொருள்
b)கை + பொருள்
c)கைம்+ பொருள்
d)கைப் + பொருள்
Q.16)’ஒரு பூவின் மலர்ச்சி, ஒரு குழந்தையின் புன்னகை புரிந்து கொள்ள அகராதி தேவை இல்லை ‘ என்றவர் யார்?
a)மு. வரதராசனார்
b)கவிக்கோ அப்துல் ரகுமான்
c)தேவநேயப்பாவாணர்
d)தமிழன்பன்
Q.17)ஒரு தந்தி ஒரு சுரம் மட்டும் இசைக்கப் பயன்படும் கருவி எது?
a)முழவு
b)தம்புரா
c)யாழ்
d)வீணை
Q.18)’ஞான சேகரம்’ என்ற இதழை நடத்தியவர் யார்?
a)ரா.பி.சேதுப்பிள்ளை
b)மறைமலையடிகள்
c)திரு.வி.க
d)ந.மு. வேங்கடசாமி நாட்டார்
Q.19)சைவ சித்தாந்தம், அத்வைதம் இரண்டிற்கும் சமரசம் செய்ய முயன்றவர் யார்?
a)திருமூலர்
b)இராமலிங்கஅடிகள்
c)தாயுமானவர்
d)வீரமாமூனிவர்
Q.20)ஒரு மொழி நிலைத்து நிற்க தேவையான ஊன்றுகோளாக விளங்குவது யாது?
a)பேச்சு மொழி
b)எழுத்து மொழி
c)ஆட்சி மொழி
d)மேற்கண்ட அனைத்தும்