TNUSRB PC Exam: Test Yourself | பொதுத்தமிழ் வினா – விடை!! Day 11!!!
Q.1)பேசும் மொழியின் ஓட்டம் என்பது எது?
a)மொழி
b)காட்சி
c)காதை
d)உரை
Q.2)பொருத்துக
A)பறவை | 1)இடுகுறிச்சிறப்புப்பெயர் |
B)வளையல் | 2)காரணப்பொதுப்பெயர் |
C)பழம் | 3)காரணசிறப்புப்பெயர் |
D)வாழை | 4)இடுகுறிப்பொதுப்பெயர் |
a)3,2,1,4
b)2,3,4,1
c)4,2,3,1
d)1,2,3,4
Q.3)ஆறு -என்று குறிக்கும் சொல்லின் பொருள் யாது?
a)கூட்டம்
b)வழி
c)தாவரம்
d)இவற்றில் எதுவுமில்லை
Q.4)சந்திப்பிழை இல்லாத தொடரைக் காண்க
a)அந்தச் சிறுவன் எங்குச் சென்றான்?
b)அந்த சிறுவன் எங்குச் சென்றான்?
c)அந்தச் சிறுவன் எங்கு சென்றான்?
d)அந்த சிறுவன் எங்கு சென்றான்?
Q.5)”நன்று நன்றென்னும் மாக்களொடு
இன்றுபெரிது என்னும் ஆங்கண தவையே” இப்பாடலின் திணை
a)குறிஞ்சித்திணை சார்ந்தது
b)முல்லைத்திணை சார்ந்தது
c)மருதத்திணை சார்ந்தது
d)நெய்தல்திணை சார்ந்தது
Q.6)Etymological Dictionary என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்லை தருக:
a)அகராதி
b)வேர்ச்சொல் அகராதி
c)வார்த்தை அகராதி
d)மேற்கண்ட எதுவுமில்லை
Q.7)இயற்கை வாழ்வில்லம் என்று வர்ணிக்கப்படும் நூல் எது?
a)பத்துப்பாட்டு
b)மூதுரை
c)கலித்தொகை
d)திருக்குறள்
Q.8)ஊராண்மை – பிரித்தெழுதுக:
a)ஊராண் + மை
b)ஊர் + ஆண்மை
c)ஊ+ ராண்மை
d)மேற்கண்ட எதுவுமில்லை
Q.9)வேயாமாடம் எனப்படுவது எது?
a)வைக்கோலால் வேயப்படுவது
b)சாந்தினால் பூசப்படுவது
c)ஓலையால் வேயப்படுவது
d)துணியால் மூடப்படுவது
Q.10)ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் குறிப்பிடுக -சை
a)கைப்பொருள்
b)அறுவறுப்பு ஒலி
c)a&b
d)இவற்றில் எதுவுமில்லை
Q.11)தால்-என்பது குறிக்கும் பொருள் யாது?
a)வாய்
b)இசை
c)ஓசை
d)நாக்கு
Q.12)ஆக்கம் எதிர்ச்சொல் தருக.
a)பெருக்கம்
b)வளர்ச்சி
c)கேடு
d)முயற்சி
Q.13)ஒட்டக்கூத்தர் பாடிய கலிங்கத்துப் பரணி யாரை பாட்டுடைத்தலைவராக கொண்டு பாடப்பட்டது?
a)விக்கிரம சோழன்
b)குலோத்துங்க சோழன்
c)ராஜராஜ சோழன்
d)கரிகால சோழன்
Q.14)திரு பள்ளிக்குச் சென்றான் – என்பது _______.
a)சினைப்பெயர்
b)இடப்பெயர்
c)காரணப்பெயர்
d)பொருட்பெயர்
Q.15)பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
a)மாணிக்கவாசகர் – திருவாசகம்
b)திருமூலர் – திருமந்திரம்
c)சுந்தரர் – தேவாரம்
d)சேக்கிழார் – திருவிளையாடற்புராணம்
Q.16)அரைக் கிணறு தாண்டியவன் போல” – என்பது எதை குறிக்கிறது?
a)கேடு
b)அக்கறை
c)ஒழுக்கம்
d)சான்றோர் கேண்மை
Q.17)தமிழ் மொழியின் உபநிடதம் என போற்றப்படும் நூல் எது?
a)மனோன்மணீயம்
b)தாயுமானவர் பாடல்கள்
c)முதுமொழிமாலை
d)திருவருட்பா
Q.18)வாக்கிய வகை அறிக. ‘முருகன் முயன்று படித்தான்’.
a)செய்வினை
b)தன்வினை
c)எதிர்மறைவினை
d)பிறவினை
Q.19)தோழியர் இருவர் விளையாட்டாகப் பாடுவது எது?
a)ஆக்காட்டி
b)மங்களம்
c)நவீனம்
d)திருச்சாழல்
Q.20)இம்மையுள் இன்மை விருந்தோராதல் வன்மையுள்
வன்மை மடவார் பொறை __ இக்குறளில் பயின்று வந்த அணி
a)உருவக அணி
b)எடுத்துக்காட்டு உவமை அணி
c)பிறிதுமொழிதல் அணி
d)உவமை அணி