7 நாட்கள் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
சண்டிகர் மாநிலத்தில் தற்போது பரவி வரும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக அங்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பின்பற்றி வரும் கொரோனா ஊரடங்கு உத்தரவுடன் தற்போது புதிதாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவல்:
இந்தியாவில் கடந்த சில நாட்களாக அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் மிகவும் அதிகரித்து வருகின்றது. இதனால் பல மாநில அரசுகள் தற்போது பொது முடக்கத்தினை அறிவித்து வருகின்றது. அந்த வகையில் சண்டிகர் மாநிலத்தில் தற்போது ஏற்கனவே பின்பற்றி வரும் கொரோனா ஊரடங்குடன் புதிதாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மெட்ரோ ரயில் சேவை – 50% இருக்கைகள் மட்டும் அனுமதி!!
7 நாட்கள் தொடர்ச்சியாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் செயல்படலாம் என்றும் மற்ற போக்குவரத்து வாகனங்கள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சினிமா, நீச்சல் குளம், ஜிம், ஸ்பா உள்ளிட்டவை செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
உணவு டெலிவரி செய்வதில் எந்த வித தடை உத்தரவும் விதிக்கப்படவில்லை. அதே போல் தனியார் துறைகளில் வேலை செய்பவர்கள் வீட்டில் இருந்தபடி தங்களது வேலையை பார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொது முடக்கம் அமல்படுத்தப்பட உள்ள அந்த 7 நாட்களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சண்டிகர் மாநில அரசு பகுதி நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கினை அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்