தமிழகத்தில் மெட்ரோ ரயில் சேவை – 50% இருக்கைகள் மட்டும் அனுமதி!!
தமிழகத்தில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகளில் நாளை மறுநாள் (மே 6) முதல் புதிய கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்படவுள்ளன. அதன் படி மெட்ரோ ரயில்களில் 50% இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளன.
ரயில் சேவை:
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் படி தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவுநேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. தவிர வார இறுதி நாளான ஞாயிற்று கிழமைகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!
இந்நிலையில் ஊரடங்குடன் கூடிய கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக, பொது போக்குவரத்து உள்ளிட்டவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் பயன்படுத்தும் பொது போக்குவரத்தான பேருந்துகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக பேருந்துகளில் மக்கள் நின்று கொண்டு பயணிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மாநகரங்களில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகளிலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது சென்னை மெட்ரோ ரயில் நாளை மறுநாள் (மே 6) முதல் 50% இருக்கைகளுடன் மட்டுமே செயல்படும். அதே போல மெட்ரோ ரயில் பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் கட்டுப்பாடுகளின் படி மே 6 ஆம் தேதி அன்று தமிழகத்தில் மேலும் சில புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வர உள்ளன.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்