ஜூலை 7 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று பரவல் நிலவரத்தின் அடிப்படையில் ஆந்திர மாநில அரசு பாதிப்பு குறைவாக உள்ள 8 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதாக அறிவித்து உள்ளது. இது ஜூலை 7ம் தேதி வரை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
நாடு முழுவதும் மாநில அரசுகள் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கைக்கு ஏற்ப ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இதனால் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு வீதமும் குறைந்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. மேலும் பொதுமக்கள் தளர்வுகளை முறையாக வழிகாட்டு நெறிமுறைகளுடன் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆந்திராவில் ஏற்கனவே ஜூலை 1 வரை முழு ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு இருந்தது.
முழு ஊரடங்கு உத்தரவு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
தற்போது விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், விஜயநகரம், குண்டூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் மற்றும் கர்னூல் ஆகிய 8 மாவட்டங்களில் மூன்று மணி நேரம் முழு ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும். கொரோனா நேர்மறை விகிதம் 5% க்கும் குறைவாக மாவட்டங்களில் இந்த தளர்வுகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்து உள்ளது. இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 7 வரை அமலில் இருக்கும்.
TN Job “FB Group” Join Now
எனவே, இந்த எட்டு மாவட்டங்களில் இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். இருப்பினும், உணவகங்கள் ற்றும் வணிக நிறுவனங்களை மூடுவதற்கு ஒரு மணிநேர சலுகை காலம் வழங்கப்படும். ஜூலை 7 க்குப் பிறகு கொரோனா பாதிப்பு நிலைமையை மறுபரிசீலனை செய்த பின்னர் இந்த மாவட்டங்களில் ஊரடங்கு மேலும் தளர்த்துவது குறித்த முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.