தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆகஸ்ட் 23 முதல் பயிற்சி!
தமிழகத்தில் நாளை முதல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தொடர்ந்து 5 நாட்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்க உள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஆசிரியர்களுக்கு பயிற்சி:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்புகள் கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் நீண்ட ஆலோசனை மற்றும் ஆய்வுகளுக்கு பிறகு தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் உயர்வகுப்புகளுக்கான 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பதற்கான தெளிவான பாதுகாப்பு வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. பள்ளிகள் அரசின் அனைத்து வழிகாட்டுதல்களையும் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கண்ணம்மாவிற்கு பிறந்தது இரட்டை குழந்தை, உண்மையை கூறிய டாக்டர் – அதிர்ச்சியில் சௌந்தர்யா!
தற்போது, தமிழகத்தின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளான கணினி இயக்குதல் பயன்பாடு, தொழில்நுட்ப திறன்வளர் பயிற்சி போன்ற பயிற்சிகளை அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பயிற்சிகள் ஆகஸ்ட் 23ம் தேதியான நாளை முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு பயிற்சி வழங்க மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் ஏற்பாடுகளை செய்து வருகிறது. முதல் கட்டமாக முதுநிலை ஆசிரியர்கள் 12,500 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும், ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வகுப்பு, மொபைல் பயன்பாடு, இணையதள பதிவேற்றம் செய்வது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இரண்டாம் கட்டமாக 76,804 ஆசிரியர்களுக்கு நாளை பயிற்சி தொடங்க உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புகள், இந்த மாதத்தில் 2.10 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.