கண்ணம்மாவிற்கு பிறந்தது இரட்டை குழந்தை, உண்மையை கூறிய டாக்டர் – அதிர்ச்சியில் சௌந்தர்யா!
பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்த திருப்பமாக தனது இரட்டை குழந்தைகள் பிறந்தது என்ற உண்மையை கண்ணம்மா தெரிந்து கொள்கிறார். இது உண்மையா என சௌந்தர்யாவிடம் கேட்க அவர் அதிர்ந்து விடுகிறார். இதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.
எபிசோட் ப்ரோமோ:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்த ட்விஸ்ட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. ஏற்கனவே லட்சுமி பாரதியிடமும், ஹேமா கண்ணம்மாவிடமும் இருக்கின்றனர். இதனால் கதையில் அடுத்த திருப்பம் என்ன என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது அதற்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் மீண்டும் கண்ணம்மாவிற்கு மீண்டும் வலி, தலை சுற்றல் ஏற்பட ஹாஸ்பிடலுக்கு செல்கிறார்.
பாரதியால் கர்ப்பமாகும் வெண்பா? ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட்!
அங்கு கண்ணம்மா கர்ப்பமாக இருந்த பொழுது அவருக்கு ரெகுலர் செக்அப் செய்த மருத்துவர் இருக்கிறார். கண்ணம்மாவின் பெயரை கேட்டதும் அவருக்கு அனைத்தும் நியாபகம் வருகிறது. நீ சௌந்தர்யா மருமகள் தானே என கேட்கிறார். அதற்கு கண்ணம்மா ஆமா என கூற, உன் குழந்தைகள் எப்படி இருக்காங்க என கேட்கிறார். இதனால் அதிர்ச்சி அடையும் கண்ணம்மா தனக்கு ஒரு குழந்தை தான் என கூறுகிறார். ஆனால் மருத்துவர் உண்மையை கூறுகிறார்.
கண்ணன், ஐஸ்வர்யா தங்க ஏற்படும் செய்யும் ஜனார்த்தனன் – பாண்டியன் ஸ்டோர்ஸில் அடுத்த ட்விஸ்ட்!
உனக்கு ஸ்கேன் எடுத்தது நான் தான். உன் கருவில் இரட்டை குழந்தைகள் வளர்ந்தது என உறுதிபட சொல்கிறார். இதனால் மிகுந்த அதிர்ச்சி அடையும் கண்ணம்மா வீட்டிற்கு திரும்புகிறார். பின்னர் தனது அத்தை சௌந்தர்யாவிற்கு கால் செய்து தனக்கு பிறந்தது இரட்டை குழந்தை தானே, உண்மையை மட்டும் சொல்லுங்க என கோபத்துடன் கேட்கிறார். இதனால் என்ன சொல்வது என தெரியாமல் சௌந்தர்யா அதிர்ச்சியில் உறைந்து போகிறார். இதனால் சீரியலில் விறுவிறுப்பு அதிகரித்து உள்ளது.