அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தில் இலவச ஆளுமைத்தேர்வு – விண்ணப்பிக்க முழு விபரம்!!
தமிழக அரசு சார்பாக அகில இந்திய குடிமைப் பணிகளுக்குரிய தேர்வுக்கான பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் யு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது இத்தேர்வுக்கான ஆளுமை தேர்வு பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான முழு விவரம் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
ஆளுமை தேர்வு:
IAS, IPS உள்ளிட்ட பணிகள் அடங்கிய அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு பயன்படும் வகையில் தமிழக அரசு சார்பில் கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 5 தேர்வர்கள் இந்த ஆண்டு நடைபெற்ற இந்திய வனப்பணி முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் வெற்றி பெற்ற தேர்வர்கள் தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ள இருக்கின்றனர். இந்த தேர்வில் வெற்றி பெற அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தில் இலவச ஆளுமைத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த மாதிரி நேர்முகத் தேர்வில் வனப்பணி முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்து தேர்வர்களும் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வு வயது விவகாரம் – உயர்நீதிமன்றம் அதிரடி!
Exams Daily Mobile App Download
இப்பயிற்சி மையத்தில் 02.01.2023 மற்றும் 03.01.2023 அன்று மாதிரி ஆளுமைத் தேர்வு நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் தேர்வர்கள் (DAF-I மற்றும் DAF-II) [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விருப்பத்தை தெரிவிக்கலாம். அத்துடன் இதனை வருகிற 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதலான தகவல்களை பெற www.civilserviceindia.com என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கவும்.