தமிழக தனியார் பள்ளிகளில் இலவச கல்வி – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டணமின்றி பயில தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது 2021-22 ஆம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் கட்டணமின்றி பயில விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணமில்லா கல்வி:
ஏழை எளிய மக்களின் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று கனவு கண்டு வருகின்றனர். ஆனால் தனியார் பள்ளிகளில் வசூல் செய்யும் கட்டணம் அவர்களின் கனவை தகர்த்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு ஏழை மக்களின் கனவை உண்மையாக்கும் வகையில் தனியார் பள்ளிகளில் எல்கேஜி முதல் 8 ஆம் வகுப்பு வரை கட்டணமின்றி பயிலும் நடைமுறை கொண்டு வரப்பட்டது, அதற்காக அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25% இட ஒதுக்கீடு செய்யப்பட்டது.
குழப்பத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் – 4 மாதங்களாக முடங்கிய நியமன பணிகள்!!
இந்த நடைமுறையானது கடந்த 10 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் 2021-22 ஆம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இன்று (ஜூலை 5) முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் rte.tnschools.gov.in என்ற தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் புகைப்படம், பிறப்பு சான்று, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆதார், ரேஷன் கார்டு, வருமான சான்று, சாதி சான்று, மற்றும் சிறப்பு பிரிவு சான்று ஆகிய சான்றுகளை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
இதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 8 ஆம் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏதேனும் விவரம் தேவையென்றால் 14417 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி மாலை 5 மணிக்கு இணையம் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தகவல் பலகையில் மாணவர்கள் விவரம் வெளியிடப்படும். ஒருவேளை கூடுதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி அன்று குலுக்கல் நடத்தப்பட்டு சேர்க்கைக்கான குழந்தைகள் தேர்வு செய்யப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.