தமிழகத்தில் குறையும் கொரோனா தொற்று பாதிப்புகள் – முன்னாள் அமைச்சர் நிம்மதி!
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்புகள் குறைந்து வருவது ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது என்று தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்புகள்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. தொற்றின் தீவிரத்தை குறைப்பதற்காக தமிழக அரசு பலத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்றின் தீவிரம் அதிகரித்து வந்ததால் ஜூன் 7ம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கிறது. இந்நிலையில் புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் முன்னாள் சுகாதாரத்துறை விஜயபாஸ்கர் அவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவது நிம்மதி அளிக்கும் விதமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
செங்கல்பட்டில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி – உயர் நீதிமன்றம் மறுப்பு!
கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளை மத்திய அரசிடம் இருந்து பெற்று உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் என்றும், செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்று கூறியுள்ளார். மேலும், இது தொடர்பான முடிவுகளை மத்திய சுகாதாரத்துறை விரைவில் அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.