செங்கல்பட்டில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி – உயர் நீதிமன்றம் மறுப்பு!
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வெர்னிகோ மேரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போது நீதிமன்றம் தலையிடுவது சரியல்ல என நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது.
செங்கல்பட்டு தடுப்பூசி ஆலை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முன்னெச்சரிக்கையாக அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதன் படி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தேவையான கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு மருத்துவ பணிகள் கழகத்திற்கு உத்தரவிட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
மேலும் இந்த தடுப்பூசிகள் பற்றாக்குறை நிலவுவதால் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் காலதாமதம் ஆகிறது. தமிழக அரசு தடுப்பூசிகள் செலுத்தும் பணியை தீவிரப்படுத்துகிறது. மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நோய் தடுப்பு பணிகளை விரைவாக செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை மத்திய அரசு, தமிழக அரசுக்கு குத்தகைக்கு அளிக்குமாறு ஸ்டாலின் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தார். இதன் மூலம் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க முடியும் என ஸ்டாலின் தெரிவித்தார்.
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு!!
தற்போது இந்த தடுப்பூசி நிறுவனத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரக்கோரி வெர்னிகோ மேரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போது நீதிமன்றம் தலையிடுவது முறையல்ல என்றும், செங்கல்பட்டில் உள்ள நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கு உத்தரவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளது.