மீண்டும் கொரோனா தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதற்கு FLiRT என பெயரிடப்பட்டுள்ளது.
கொரோனா:
கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் உலகமெங்கும் கொரோனா தாக்கம் தீவிரமாக பரவ தொடங்கியது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்பை சந்தித்தது. எனவே மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. ஊரடங்கு அமல்படுத்தியும் வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்து வந்த நிலையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கொரோனா தொற்று பரவுவது படிப்படியாக குறைய தொடங்கியது.
RRB தேர்வுக்கு தயார் ஆகுறீங்களா? தேர்வுக்கான பாடத்திட்டம் இதோ!
தற்போது மீண்டும் கொரோனா தாக்கம் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது பரவி வரும் கொரோனா தொற்றுக்கு FLiRT என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த ஏழு நாட்களில் மட்டும், 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தினமும் சராசரியாக 250 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிங்கப்பூரில் அடுத்த 2 முதல் 4 வாரங்களில் கொரோனா பரவல் எண்ணிக்கை உச்சத்தை எட்டும் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.