தமிழகத்தில் நீட் தேர்வு அச்சம் – மேலும் ஒரு மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி!
தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பக்கம் அய்யேறி பகுதியை சேர்ந்த அனுசியா என்ற மாணவி நீட் தேர்வு அச்சத்தால் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
மாணவி தற்கொலை:
தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்று தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி கடந்த 2017ம் ஆண்டு முதல் அதனை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தியும், கோரிக்கைகள் வைத்தும் தற்போது போது வரை ரத்து செய்யவில்லை. இந்த நிலையில் 2021 – 2022ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வானது கடந்த 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்றது. இந்த நிலையில் நீட் தேர்வை சரியாக எழுதவில்லை அதனால் மருத்துவம் படிப்பில் சேர முடியாது என்று எண்ணி மன உளைச்சலுக்கு ஆளாகி நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தற்கொலை செய்து வருகின்றனர்.
TN TRB முதுகலை ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கு தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சேலம் மாவட்டத்தை சேர்த்த தனுஷ் என்ற மாணவன் 2 முறை நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற்றதால் மூன்றாம் முறை நீட் தேர்வு எழுந்தவிருந்த நிலையில் தேர்வு பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அவர்களை தொடர்ந்து இன்று வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த மாணவி சௌந்தர்யா தேர்வை சரியாக எழுதவில்லை என்ற விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அரியலூர் துளாரங்குறிச்சியில் நீட் தேர்வு எழுதிய மாணவி கனிமொழி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 முதல் 3ம் வகுப்பு வரை செப்.20ம் தேதி பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இந்த நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அய்யேறி பகுதியை சேர்ந்த அனுசியா என்ற மாணவி நீட் தேர்வை சரியாக எழுதவில்லை என்ற காரணத்தால் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதனால் மாணவி அனுசியா 40% காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீட் தேர்வினால் அடுத்தடுத்து நடைபெறும் தற்கொலை சம்பவங்கள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.