10,12-ஆம் வகுப்பு தனித்தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வுத்துறை வெளியீடு!!
மதுரையில் மதிப்பெண் சான்றிதழ் பெறாத 10-ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு தனித்தேர்வு மாணவர்கள் அடுத்த 30 நாட்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம் என தேர்வுத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பெண் சான்றிதழ்:
தமிழகத்தில் 10 & 12-ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் பள்ளிகளுக்கு செல்லாமல் தனியார் பயிற்சி நிறுவனங்கள் மூலம் தேர்வு எழுதுவார்கள். அவ்வாறு தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வு எழுதிய மையங்களில் 30 நாட்களில் பெற்று கொள்ளலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
2014 மார்ச், ஜூன், அக்டோபர், 2015 மார்ச்,ஜூன்,அக்டோபர், 2016 மார்ச், ஜூன், அக்டோபர் ஆகிய 9 பருவங்களில் மதிப்பெண் சான்றிதழ்களை பெறாத தேர்வர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி அந்த மாணவர்கள் அடுத்த 30 நாட்களில் தங்கள் தேர்வு மையங்களில் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
நேரில் வர முடியாத தேர்வர்கள் ரூபாய் 45 மதிப்பு ஸ்டாம்ப் ஒட்டிய பத்திரத்தில் தங்களது முகவரியுடன் கூடிய உறையில் கையொப்பமிட்ட கடிதத்துடன், தேர்வு எழுதிய ஹால் டிக்கெட், தற்காலிக மதிப்பெண் சான்று நகல் போன்றவற்றை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். பின் அதே தபால் மூலம் அவர்களது மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.
தேர்வாணையம் மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பாக இதனை அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பை தவறும் பட்சத்தில் தேர்வுத்துறை விதிப்படி 2 ஆண்டுகளுக்கு மேல் தனித்தேர்வர்களால் பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் அனைத்தும் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்