தமிழகத்தில் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் – அக்.25 முதல் தொடக்கம்!

0
தமிழகத்தில் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் - அக்.25 முதல் தொடக்கம்!
தமிழகத்தில் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் - அக்.25 முதல் தொடக்கம்!
தமிழகத்தில் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் – அக்.25 முதல் தொடக்கம்!

தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்காக முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவர்களுக்கு அக்டோபர் 25ம் தேதி வகுப்புகள் தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பொறியியல் படிப்பு:

தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் குறைந்துள்ளதை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் செப்.1 முதல் தொடங்கப்பட்டு நல்ல முறையில் இயங்கி கொண்டிருக்கின்றது. கல்லூரியை பொறுத்தவரை இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமே நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு முடிவடைந்துள்ளது. கடந்த ஆண்டுகளை விட முதல் 2 சுற்றுகளிலே 21,000 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும் 3வது மற்றும் 4வது சுற்றுகள் நடைபெற இருப்பதால் இன்னும் பல மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேருவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கவனத்திற்கு – அக்.15 கடைசி நாள்! அரசு உத்தரவு!

கடந்த ஆண்டு அண்ணா பல்கலை கழகத்தில் 500 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அந்தநிலை தொடராமல் அனைத்து இடங்களும் நிரப்பப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் எண்ணத்தை கருத்தில் கொண்டு 7.5% இட ஒதுக்கீடு வழங்கி தமிழக முதலமைச்சர் முக. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் 5,970 அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். இவ்வாறு 7.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்க கூடாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

ஆனாலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்த அளவிலான அரசுப்பள்ளி மாணவர்களே பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பயோடெக்னாலஜி படிப்பிற்கு நிதி ஒதுக்க கோரி மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மத்திய அரசு அனுமதி அளித்தாலும், அளிக்காவிட்டாலும் 69% இட ஒதுக்கீடு அடிப்படையில் பயோடெக்னாலஜி படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் முதலாமாண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு அக்டோபர்-25 ம் தேதி நேரடி வகுப்புகள் தொடங்கும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!