பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கவனத்திற்கு – அக்.15 கடைசி நாள்! அரசு உத்தரவு!

0
பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கவனத்திற்கு - அக்.15 கடைசி நாள்! அரசு உத்தரவு!
பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கவனத்திற்கு - அக்.15 கடைசி நாள்! அரசு உத்தரவு!
பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கவனத்திற்கு – அக்.15 கடைசி நாள்! அரசு உத்தரவு!

டெல்லியில் வரும் 15ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட இருக்கும் நிலையில் அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்வதற்கு முன்பு கொரோனா தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி கட்டாயம்

சமீப காலமாக பள்ளி ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் என அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தலைநகர் டெல்லியிலும் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் அக்டோபர் 15ம் தேதிக்குள் குறைந்தபட்சம் முதல் டோஸ் தடுப்பூசியை எடுத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் அவர்கள் அலுவலகங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

இது தொடர்பாக டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வரும் 15ம் தேதிக்குள் டெல்லி அரசாங்கத்தின் கீழ் உள்ள அரசுத் துறைகள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், முன்னணி தொழிலாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி போட வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்போது அக்டோபர் 16 வரை தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் பணிக்காலம் விடுப்பாக கருதப்படும் என்றும் தடுப்பூசியின் முதல் டோஸ் அல்லது 2வது டோஸின் சரிபார்ப்பு ஆரோக்ய சேது செயலி அல்லது தடுப்பூசி சான்றிதழ் மூலம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், டெல்லியில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 லிருந்து 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளன.

உலகளவில் 80% பள்ளிகள் திறப்பு – ஆய்வின் முடிவுகள் வெளியீடு!

இதை தொடர்ந்து நவம்பர் 1 முதல் நர்சரி துவங்கி 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருக்கிறது. இப்போது பள்ளிகளை திறப்பதற்கான டெல்லி அரசின் வழிகாட்டுதல்களின்படி, வகுப்புகள் 50 சதவீத திறனுடன் செயல்படும். பள்ளிகளில் நுழைவு வாயில், சுத்திகரிப்பு, சமூக இடைவெளி போன்ற அனைத்து கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!