தமிழகத்தில் ஜூன் 19 முதல் 10 நாட்களுக்கு மின் பராமரிப்பு பணிகள் – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் முன்னறிவிப்பு இன்றி மின்தடை ஏற்படுவதை தடுக்க நாளை முதல் 10 நாட்களுக்கு மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதாக தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அறிவித்துள்ளார்.
மின் பராமரிப்பு பணிகள்:
தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மின்தடை தொடர்ந்து ஏற்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்து வருகிறது. தற்போது இதை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நாளை முதல் 10 நாட்களுக்கு பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதாக தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், மின் இணைப்பு கூறி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் மின் இணைப்பு வழங்க முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கோவில்கள் திறப்பு எப்போது? அமைச்சர் விளக்கம்!
சமீப காலமாக ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்படுவதாக மின் வாரியத்திற்கு புகார்கள் வருகின்றன. கடந்த ஆட்சியில் 2020 செப்டம்பர் மாதம் முதல் 9 மாதங்களுக்கு மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை. இதன் காரணமாக சில இடங்களில் மின் தடை ஏற்படுகிறது. தற்போது இதை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை (ஜூன் 19) முதல் அடுத்த 10 நாட்களுக்கு மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
TN Job “FB Group” Join Now
தமிழகம் முழுவதும் 83,553 இடங்களில் மரக்கிளைகள் அகற்றப்பட வேண்டிய நிலை உள்ளன. மேலும் சரிந்த மின் கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின் கம்பங்கள், பழுதடைந்த மின் கம்பங்கள் என பல பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இவை அனைத்தும் முழுமையாக நிறைவேற்ற சுமார் 6 மாதங்கள் ஆகும். இந்நிலையில் தமிழகத்தில் மின் தடை ஏற்படாமல் இருக்க ஒருங்கிணைந்த மின் பராமரிப்பு திட்டம் மூலம் பகுதிவாரியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. தினமும் சுமார் 2 முதல் 3 மணி நேர அவகாசத்துக்குள் முடிக்கப்படும் என்றும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.