உள்ளூர் ரயில்கள் இயங்க அனுமதி? கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு? – மாநில அரசு திட்டம்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் அங்கு உள்ளூர் ரயில்கள், கடைகள் மீதான தடைகள் விரைவில் தளர்வடைய உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. இதன் விளைவால் சமீபத்தில் மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது. மாநிலத்தில் நேற்றைய நிலவரப்படி, புதிதாக 6,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 123 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் மொத்தம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,64,922 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,31,552 ஆகவும் உயர்ந்துள்ளது.
LKG, UKG படித்தால் தான் 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கை? அமைச்சர் எச்சரிக்கை!
மகாராஷ்டிரா மாநிலத்தின் தொற்று மீட்பு விகிதம் இப்போது 96.33 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 2.09 சதவீதமாகவும் உள்ளது. தொடர்ந்து மாநிலத்தில் தினசரி பாதிப்பு விகிதம் குறைந்து வருகிறது. இருப்பினும், பாதிப்பின் அனைத்து நிலவரங்களையும் மாநில அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகளினால், அனைத்து வணிகங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவிக்க பல்வேறு துறைகளில் இருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
கோவிட் -19 நிர்வாகத்தின் மாநில ஆலோசகர் டாக்டர் சுபாஷ் சலுங்கே அவர்கள், உள்ளூர் ரயில்கள் மற்றும் கடைகளுக்கு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், இந்த துறை ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை வலியுறுத்தியும், மாலை 4 மணி வரை கடைகள் திறக்க அனுமதி வழங்குவது பற்றியும் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.