ஆப்கானிஸ்தானில் இன்று இரவு ஊரடங்கு அமல் – வன்முறை எதிரொலி!

0
ஆப்கானிஸ்தானில் இன்று இரவு ஊரடங்கு அமல் - வன்முறை எதிரொலி!
ஆப்கானிஸ்தானில் இன்று இரவு ஊரடங்கு அமல் - வன்முறை எதிரொலி!
ஆப்கானிஸ்தானில் இன்று இரவு ஊரடங்கு அமல் – வன்முறை எதிரொலி!

கடந்த சில மாதங்களாக ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் தாக்குதல் தீவிரமாக காணப்படுவதால், இந்த வன்முறைகளைத் தடுக்க நாட்டின் 31 மாகாணங்களில் இன்று (ஜூலை 24) இரவு நேர ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முழு ஊரடங்கு

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில மாதங்களாக தலிபான் தாக்குதலால் நாடே ஸ்தம்பித்துள்ளது. தீவிரமான வன்முறை காரணமாக கிளர்ச்சியாளர்கள் ஆப்கானிஸ்தானின் முக்கிய எல்லை பகுதிகளையும், பல நூற்றுக்கணக்கான மாவட்டங்களையும் கைப்பற்றியுள்ளனர். தவிர தலிபான்கள் கடந்த மே மாத தொடக்கத்தில் இருந்து பல மாகாண தலைநகரங்களை சுற்றி வளைத்துள்ளனர். இந்த வன்முறையைத் தடுக்கும் வகையிலும், தலிபான் இயக்கங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் நாடு முழுவதும் ஏறத்தாழ 31 மாகாணங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மாணவர்களிடம் கட்டணம் வசூல் கூடாது – அரசுக்கு கோரிக்கை!

தவிர அந்நாட்டின் காபூல், பஞ்ச்ஷீர் மற்றும் நங்கர்ஹார் உள்ளிட்ட மாகாணங்களில் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்கமானது இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை அமலில் இருக்கும் என்று உள்துறை அமைச்சகத்தின் துணை செய்தித் தொடர்பாளர் அகமது ஜியா தெரிவித்துள்ளார். இதற்கிடையில் அமெரிக்கத் தலைமையிலான வெளிநாட்டுப் படைகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், மீண்டும் வன்முறையை துவங்கியுள்ள தலிபான்கள், இப்போது ஆப்கானிஸ்தானின் சுமார் 400 மாவட்டங்களில் பாதி பகுதிகளை கட்டுக்குள் வைத்திருக்கிறது.

தமிழகத்தில் இருந்து தாஜ்மஹாலுக்கு ரயில், விமானம் மூலம் சுற்றுலா!

கடந்த மே மாதத்தில் இருந்து தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஏராளமான நிலப்பரப்பை இழக்க நேரிட்டது. இதனிடையே கடந்த ஆண்டு வாஷிங்டன் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையிலான ஒரு முக்கிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதை குறிப்பிட்ட தலிபான்கள், அமெரிக்க இராணுவத்தின் வான்வழித் தாக்குதல்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளது. தாக்குதல்களை நடத்துவது என்பது கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை மீறுவதாகும். இது அதிகமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று தலிபான் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார தொடக்கத்தில், அமெரிக்க கூட்டுத்தளபதிகளின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லி, தலிபான்கள் போர்க்களம் பல யுக்திகளை கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!