இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல் – கொரோனா பரவல் எதிரொலி!
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பரவல் குறைந்து வருவதையடுத்து, கேரளாவில் பதிவு செய்யப்பட்டு வரும் புதிய பாதிப்புகளால் அம்மாநிலம் முழுவதும் இன்று (ஆகஸ்ட் 30) முதல் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இரவு நேர ஊரடங்கு
கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் தீவிரமடைந்து வந்த கொரோனா பரவலால் மாநிலங்கள் தோறும் முழு முடக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா நோய் பரவல் மீண்டுமாக தீவிரமடைந்து வருகிறது. அதன் மூலம் அம்மாநிலத்தில் தினசரி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ரேஷன் கடைகளில் மீண்டும் ‘டோக்கன்’ சிஸ்டம் – மாவட்ட நிர்வாகம் திட்டம்!
இந்த பாதிப்பு என்பது நாடு முழுவதும் ஏற்படும் மொத்த பாதிப்புகளில், பாதியளவாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதாவது கேரளாவில் கடந்த சில வாரங்களாக அதிகமாகி வந்த கொரோனா பாதிப்புக்கு மத்தியில், சமீபத்தில் ஓணம் பண்டிகையை ஒட்டி அறிவிக்கப்பட்ட தளர்வுகளின் காரணமாக புதிய பாதிப்புகள் இன்னும் அதிகரித்ததாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே மாநிலம் முழுவதும் பெருகி வரும் கொரோனா தொற்று நிலவரத்தை குறித்து அரசு ஆய்வு செய்தது.
செப்.8 வரை 11 நாட்களுக்கு கடைகள் செயல்பட அனுமதி இல்லை – சென்னை காவல்துறை!
அப்போது ஓணம் பண்டிகையின் போது மக்கள் முறையான கொரோனா தடுப்பு நடவடிக்கையை கைக்கொள்ளவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் நோய் பரவலின் தீவிரத்தை குறைக்கும் வகையில் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் இக்கட்டுப்பாடுகள் தினசரி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று (ஆகஸ்ட் 30) முதல் அமல்படுத்தப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.