தமிழக மின்நுகர்வோருக்கு ஹாப்பி நியூஸ் – இனி ஆதார் மூலம் கட்டணம் செலுத்தலாம்! விரைவில் அறிமுகம்!
தமிழகத்தில் இ-சேவை மையங்களில் ஆதார் மூலமாக கட்டணம் செலுத்தும் புதிய திட்டத்தை தமிழ்நாடு மின் ஆளுமை முகாமை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் முதல் கட்டமாக 600 சேவை மையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆதார்:
இந்தியாவில் ஆதார் அட்டை மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. நமது நாட்டில் பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போதைய கால கட்டத்தில் அனைத்து வேலைகளுக்கும் ஆதார் அவசியமாகிறது. ஆதார் அட்டை வழங்கிய போது அதில் பிறந்த வருடம் மட்டுமே இடம் பெற்றது. சிலருக்கு தவறான விவரங்களும் இடம் பெற்றிருந்தது. இதனால் மத்திய அரசு உங்கள் ஆதார் கார்டில் சுய விவரங்களில் ஏதேனும் மாறுபாடுகள் செய்ய வேண்டும் என்றால் ஆதார் மையம் மூலம் திருத்தம் செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பில் மாற்றம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அவ்வப்போது இந்திய அஞ்சல் துறை சார்பாக சிறப்பு ஆதார் முகாம் நடைபெற்றது. இதன் மூலம் இலவசமாக ஆதாரில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இ-சேவை மையங்களில் ஆதார் மூலமாக கட்டணம் செலுத்தும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் செயல்படும் 580 உட்பட பல்வேறு முகமைகளின் கீழ் 10,818 இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன. இதை; வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ் உட்பட 40 சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னைவாசிகள் கவனத்திற்கு – பிப்.19ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விடுமுறை!
கடந்த 2016-ம் ஆண்டு முதல் தற்போது வரை 6.5 கோடிக்கும் மேலான பரிவர்த்தனைகள் இ-சேவை மூலம் நடைபெற்றுள்ளது. இங்கு பொது மக்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க ஆதார் மூலமான பரிவர்த்தனைகள் முறை’என்ற புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இ-சேவை மையத்தில் சேவைகளுக்கான கட்டணத்தை செலுத்த, அங்கு இருக்கும் கைரேகை கருவியில் நமது கைரேகையை பதிவிட வேண்டும். இந்த திட்டம் முதல்கட்டமாக 600 சேவை மையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.