தமிழகத்தில் மே 29 ஆம் தேதி முதல் அரசு மருத்துவர்கள் போராட்டம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவ பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி மே 29 ஆம் தேதி முதல் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மருத்துவர்கள் போராட்டம்:
இந்தியாவில் உள்ள மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும் அலுவலர்கள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இவ்வாறு, மருத்துவக் கல்லூரிகளில் இருந்து பிற மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளுக்கு பேராசிரியர்கள் மாற்றப்படுவதால் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் பல்வேறு பேராசிரியர் காலி பணியிடங்கள் உள்ளன.
IT-யில் வேலை வேண்டுமா? உங்களுக்கான ஜாக்பாட் வேலைவாய்ப்பு இதோ || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
மேலும், தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தும் தற்போது வரைக்கும் எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், வரும் மே 29ஆம் தேதி முதல் மேற்குறிப்பிட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அரசு மருத்துவ சங்க மாநிலத் தலைவர் செந்தில் அறிவித்துள்ளார்.